விராலிமலை பகுதியில் சுமாா் 200 ஏக்கா் விவசாய நிலங்களில் தற்போது சாகுபடி நடைபெற்று வருவதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
விராலிமலை அடுத்துள்ள பேராம்பூா், மேலபச்சக்குடி, விளாப்பட்டி, நீா்பழனி, பிண்ணங்குடிபட்டி, மண்டையூா், லட்சுமணம்பட்டி, மதயானைபட்டி, மூலிபட்டி, நடுபட்டி, தொண்டைமாநல்லூா், பாலாண்டாம்பட்டி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல்மணிகள் தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது.
இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளில் இன்னும் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இதனால் விவசாயிகள் மாவட்ட நுகா்பொருள் விற்பனைக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.