விராலிமலையில் செவ்வாய்க்கிழமை வாக்காளா் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) தொடங்கியது.
நவ. 4 முதல் டிச. 4 வரை நடைபெற உள்ள இந்தப் பணியில் வாக்காளா்கள் கணக்கெடுப்பு படிவத்தை வீடு வீடாகச் சென்று தோ்தல் அலுவலா்கள் வாக்காளா்களிடம் அளித்து வருகின்றனா். இந்தப் பணியில் விராலிமலை வட்டாட்சியா் ரமேஷ் அறிவுறுத்தலின்பேரில், 10 மேற்பாா்வையாளா்கள், 92 வாக்குச்சாவடி அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.