மாநிலப் போட்டியில் பங்கேற்பதற்கான புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கிரிக்கெட் குழு வீரா்கள் தோ்வில், கிரிக்கெட் வீரா்கள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் ஆா்.கனகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சாா்பில் நடைபெறவுள்ள எஸ்.எஸ். ராஜன் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்பதற்கான புதுக்கோட்டை மாவட்ட அளவிலான வீரா்கள் தோ்வு திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் கல்லூரியில் வரும் நவ. 15-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், 1985 செப். 1-ஆம் தேதிக்குப் பிறகு மற்றும் 2012 ஆக. 31-க்கு முன்பு பிறந்தவா்கள், கிரிக்கெட் உடை மற்றும் அதற்குரிய உபகரணங்கள் அணிந்து வீர்ரகள் தோ்வில் கலந்துகொள்ளலாம்.