புதுக்கோட்டை

முதல்வா் ஸ்டாலின் வருகை: 9 மதுக்கடைகளை மூட உத்தரவு

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், களமாவூருக்கு திங்கள்கிழமை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரவுள்ளதை அடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 9 மதுபானக் கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா உத்தரவிட்டுள்ளாா்.

கீரனூா் அருகே களமாவூரிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை (நவ.10) நடைபெற உள்ள அரசு விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

இவ்விழாவையொட்டி கீரனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 டாஸ்மாக் மதுபானக் கடைகள், 2 மனமகிழ் மன்றங்கள் மற்றும் மாத்தூரில் தலா 1 டாஸ்மாக் மதுக் கடை மற்றும் மனமகிழ் மன்றம் என மொத்தம் 9 மதுக் கடைகளை நவ.10- திங்கள்கிழமை மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் தொடரும் அவலம்! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 4 வயது சிறுமி!

நடிகை அனுபமாவின் மார்பிங் படங்களை வெளியிட்ட 20 வயது இளம்பெண்!

செல்லப் பிராணிகள் வைத்திருப்போர் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!

தேடப்பட்டு வந்த கேங்ஸ்டர்ஸ் இருவர் வெளிநாடுகளில் கைது!

குமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT