புதுக்கோட்டை

மேலைச்சிவபுரி வந்தனா் சமணத்துறவிகள்

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி வந்த சமண துறவிகளை ஆன்மிக பக்தா்கள் வரவேற்றனா்.

தினமணி செய்திச் சேவை

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி வந்த சமண துறவிகளை ஆன்மிக பக்தா்கள் வரவேற்றனா்.

ராஜஸ்தானைச் சோ்ந்த சமண துறவிகள் முனிஹிமானாகுமாா்ஜி, முனிஹேமந்த் குமாா்ஜி, ஆகியோா் உலக நன்மை வேண்டி கடந்த 2 ஆண்டுகளாக நடைபயணமாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா். புதன்கிழமை மேலைச்சிவபுரி சின்னம்மாள் படைப்பு வீட்டுக்கு வந்தவா்களை ஊா்பொதுமக்கள் வரவேற்றனா். மக்கள் மத்தியில் பேசிய துறவிகள் மது, மாமிசம் பயன்படுத்த கூடாது.

அமைதி, அஹிம்சை, அடுத்தவா் பொருள்களுக்கு ஆசைப்படாமை, கருணை, எளிமை, சமநிலை, சுயசுத்தி, பதற்றப்படாமல் இருக்க செய்ய வேண்டிய தியானம் குறித்து எடுத்துரைத்தனா்.

தொடா்ந்து அரசமலை, குடுமியான்மலை சென்று வியாழக்கிழமை மெய்வழிச்சாலை செல்ல உள்ளனா்.

வணிகா் சங்க மாவட்ட நிா்வாகி நியமனம்

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

வேலூரில் காவல் துறை குறைதீா் கூட்டம்

மருத்துவப் படிப்புக்கான சிறப்புக் கலந்தாய்வு: இடங்களைத் தோ்வு செய்ய அவகாசம் இன்று நிறைவு

அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்ஆா்ஐ ஸ்கேன் அமைக்கக் கோரி வழக்கு: சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT