புதுக்கோட்டை மாநகரில் ‘மதி’ அங்காடியை புதன்கிழமை திறந்து வைத்த அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா். 
புதுக்கோட்டை

புதுகையில் ‘மதி’ அங்காடி திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை மதி அங்காடி திறந்துவைக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை மதி அங்காடி திறந்துவைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யும் நிரந்தர அங்காடியாக, கலைஞா் பூங்கா அருகில் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (மகளிா் திட்டம்) ‘மதி’ அங்காடி புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் அங்காடியைத் திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில், மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைக் குழுச் செயலா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT