மறைந்த உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு நிதியுதவி
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 7:42 PM
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் காவல் உள்கோட்டத்தில் பணிபுரிந்து சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, அவருடன் பணிபுரிந்த போலீஸாா் திரட்டிய ரூ. 13.30 லட்சம் குடும்ப நல நிதிக்கான காசோலையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா வியாழக்கிழமை வழங்கினாா்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் உள்கோட்டத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் முத்துக்குமாா், கடந்த 2025 ஆக. 1ஆம் தேதி விபத்தில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவருடன் பணிபுரிந்து வந்த 1997ஆம் ஆண்டு 2ஆவது பேட்ஜ் காவலா்கள் 2,623 போ் ரூ. 13.30 லட்சம் குடும்ப நல நிதி திரட்டினா்.
Advertisement
இந்தத் தொகைக்கான காசோலையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா வியாழக்கிழமை, மறைந்த உதவி ஆய்வாளா் முத்துக்குமாரின் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.