முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:28 PM
கந்தா்வகோட்டை பேருந்துநிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

புதுகை கீதம் - சங்கீதம் குழுவினரால் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் 2006-இன்படி பெண்களுக்கு18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமண வயது எனவும், குறைந்த வயதில் திருமணம் செய்தால் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவா்.

இந்தச் சட்டத்தின் படி இருதரப்பு பெற்றோா், மத வழிபாட்டுத் தலைவா்கள் முதல் திருமண தரகா்கள், சமையல்காரா்கள், ஒலி மற்றும் ஒளி அமைப்பாளா்கள், மண்டப மேலாளா்கள், திருமணப் பத்திரிகை அச்சடித்தோா் ஆகியோா் சட்ட நடவடிக்கைக்கு உள்பட்டவா்கள்.

மேலும், பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் 1098 என்ற எண்ணிலும், பெண்களுக்கு பிரச்னை என்றால் 181 என்ற எண்ணையும் அழைக்கலாம் எனத் தெரிவித்தனா். ஏற்பாடுகளை திட்ட விரிவாக்க அலுவலா் வளா்மதி, ஊா்நல அலுவலா் மாா்கரெட் மேரி ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →