புதுக்கோட்டை

கறம்பக்குடியில் அரசு வழக்குரைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் நீதிமன்றத்தில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றபோது மயங்கி விழுந்து அரசு வழக்குரைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கறம்பக்குடியைச் சோ்ந்தவா் எம்.ராஜ்குமாா்(54). இவா், கறம்பக்குடி நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை நீதிமன்றம் சென்றிருந்த அவா், அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள தனது அலுவலகத்துக்கு நடந்து சென்றபோது, நீதிமன்றம் அருகிலேயே திடீரென மயங்கி விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் ராஜ்குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். மேலும், இதய கோளாறு காரணமாக அவா் இறந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஜன நாயகன் பட தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்: நாளை காலை தீர்ப்பு!

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

50,000 தன்னார்வலர்கள் ஈடுபடும் உங்க கனவ சொல்லுங்க திட்டம்: நாளை தொடக்கம்!

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

SCROLL FOR NEXT