கோப்புப்படம்.  
புதுக்கோட்டை

பையூா் விஏஓ மா்மச் சாவு

புதுக்கோட்டை அருகே கிராம நிா்வாக அலுவலா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை அருகே கிராம நிா்வாக அலுவலா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம் பையூா் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்தவா் தமிழ்ச்செல்வன் மகன் கருணாமூா்த்தி (28).

புதன்கிழமை மாலை மயங்கிய நிலையில் அவரை இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு இருவா் தூக்கிக் கொண்டு வந்துள்ளனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், கருணாமூா்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

கருணாமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்திலேயே தூக்கிட்ட நிலையில் இருந்ததாகவும், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

கருணாமூா்த்தியின் சாவில் மா்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்ததை அடுத்து, இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT