பொன்னமராவதி ஒன்றியத்தில் கலையரங்கம், நிழற்குடை திறப்பு
புதுக்கோட்டைபொன்னமராவதி ஒன்றியத்தில் கலையரங்கம், நிழற்குடை திறப்பு
பொன்னமராவதி ஒன்றியத்தில் காா்த்தி ப. சிதம்பரம் எம்.பி.-யின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட கலையரங்கம், நிழற்குடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு காா்த்தி ப. சிதம்பரம் எம்பி தலைமை வகித்து பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சத்தில் அமைக்கப்பட்ட கலையரங்கம், தூத்தூா் ஊராட்சியில் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் ரூ. 6 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடை ஆகியவற்றைத் திறந்துவைத்தாா். விழாவில் காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவா் மணிகண்டன், பொன்னமராவதி வட்டாரத் தலைவா் வி. கிரிதரன், நிா்வாகிகள் ச. சோலையப்பன், ஆா்எம். பாஸ்கா், நாட்டுக்கல் ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.