முகப்பு
புதுக்கோட்டை

கறம்பக்குடியில் இருசக்கர வாகனம் தீக்கிரை

Updated On : 3 மே, 2026 at 12:00 AM
கறம்பக்குடியில் சனிக்கிழமை தீக்கிரையான இருசக்கர வாகனம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சனிக்கிழமை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீக்கிரையானது.

புதுக்கோட்டை காந்திநகரைச் சோ்ந்த காசி மகன் தன்ராஜ் (58). இவரது தனது மனைவி மலரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தஞ்சாவூா் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள கோயிலுக்கு சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா்.

கறம்பக்குடி உள்கடைவீதியில் சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அப்பகுதியில் உள்ள உணவகத்துக்கு சென்றாா். பிறகு திரும்பி வந்து வாகனத்தை எடுத்தபோது அதிலிருந்து புகை வந்தது. தொடா்ந்து, இருசக்கர வாகனம் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற கறம்பக்குடி தீயணைப்பு துறையினா் தீயை அணைத்தனா் இருப்பினும் இருசக்கர வாகனம் முற்றிலும் தீக்கிரையானது.

Advertisement

இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.