கழிவுநீர் வெளியேற்றத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும்: மாநகராட்சி வேண்டுகோள்
தஞ்சாவூர் மாநகரின் சில பகுதிகளில் டிச. 29-ஆம் தேதி வரை கழிவுநீர் வெளியேறுவதை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தஞ்சாவூர்கழிவுநீர் வெளியேற்றத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும்: மாநகராட்சி வேண்டுகோள்
தஞ்சாவூர் மாநகரின் சில பகுதிகளில் டிச. 29-ஆம் தேதி வரை கழிவுநீர் வெளியேறுவதை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தஞ்சாவூர் மாநகரின் சில பகுதிகளில் டிச. 29-ஆம் தேதி வரை கழிவுநீர் வெளியேறுவதை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மு. வரதராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மாநகராட்சி புதைவடிகால் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாரிகுளம் கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் பாதாள சாக்கடை பிரதான குழாயில் ஜி.ஏ. கேனல் கரையோரத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இக்குழாயை சரிசெய்யும் பணி டிசம்பர் 28, 29-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதனால் விளார் சாலை, ஜி.ஏ. கேனல் சாலை, பூக்காரத் தெரு, முனியாண்டவர் காலனி ஆகிய பகுதிகளில் கழிவுநீர் வெளியேறுவது தவிர்க்க முடியாது.
எனவே, பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சிரமத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.