தஞ்சாவூர்

திருவையாறில் மழை வேண்டி கூட்டு வழிபாடு

DIN

திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறை காவிரி ஆற்றில்  மழை வேண்டி திருவையாறு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் ஞாயிற்றுக்கிழமை மாலை கூட்டு வழிபாடு நடத்தினர்.
தஞ்சாவூர் வழிபாட்டு மன்ற இளைஞர் அணிச் செயலர் குணாளன் தலைமை வகித்தார். இதில் கோ பூஜை, 108 மந்திரங்கள் கூறியும், மழை வேண்டி குரு போற்றி பாடல், அம்பாள் போற்றி மந்திரம் பாடினர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றின் நடுவில் நின்று மழை பாடல் பாடி தீபாராதனை செய்யப்பட்டது.  தொடர்ந்து 2 நிமிடம் தியானம் செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், மன்றத்தின் தஞ்சாவூர் வட்டாரத் தலைவர் நாகராஜன், சண்முகம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT