தஞ்சாவூர்

இளைஞர் மீது தாக்குதல்: 3 பேர் கைது

DIN

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள அம்மாபேட்டை அர்ஜுன் காலனியைச் சேர்ந்தவர் முகம்மது அப்பாஸ் (45). இவர் அம்மாபேட்டை கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இவரது வீட்டுக்கு அருகே வசித்து வருபவர் வினோத், இவரது மனைவி மரியநித்யா(30), மரியநித்யா குடும்பத்துக்கும் முகம்மது அப்பாஸ் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது  மரியநித்யாவின் கொளுந்தனர் உதயன் 37), அவரது நண்பர்கள் அம்மாபேட்டையை சேர்ந்த குபேந்திரன் 37), குமரேசன் (20), ராஜசேகரன் (29), மாதவன், ஞானமணி உள்ளிட்டோர் முகம்மது அப்பாஸிடம் தகராறு செய்துள்ளனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ரபீக் (37)என்பவர் அப்பாஸுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த உதயன் மற்றும் அவரது நண்பர்கள் ரபீக்கை தாக்கினராம். காயமடைந்த ரபீக் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த அம்மாபேட்டை போலீஸார் குபேந்திரன், குமரேசன், ராஜசேகரன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து, உதயன், மாதவன், ஞானமணி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT