கழிப்பறையில் ஆண் சடலம்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கழிப்பறையில் செவ்வாய்க்கிழமை ஆண் சடலம் கிடந்தது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கழிப்பறையில் செவ்வாய்க்கிழமை ஆண் சடலம் கிடந்தது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தின் திருவையாறு வழித்தடப் பகுதியில் உள்ள மாநகராட்சிக் கழிப்பறையில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இச்சடலத்தைக் கைப்பற்றிய கிழக்கு போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.