பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்
பேராவூரணி பேரூராட்சியில் துப்புரவுப் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் வீரமணி. இவர் தூய்மைப் பணியில் கவனமின்றி செயல்படுவதாகவும்
பேராவூரணி பேரூராட்சியில் துப்புரவுப் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் வீரமணி. இவர் தூய்மைப் பணியில் கவனமின்றி செயல்படுவதாகவும், டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதை கண்காணிக்காமல் இருந்ததாகவும் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து, புகாரை விசாரித்த ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, பணியில் கவனம் செலுத்தாமல் இருந்தது தொடர்பாக வீரமணியை தாற்காலிகமாக பணி நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டார்.