முகப்பு
தஞ்சாவூர்

மணல் அள்ளி வந்த மாட்டு வண்டிகள் பறிமுதல்: 6 பேர் கைது

பாபநாசம் அருகே ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 6 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

தஞ்சாவூர்

மணல் அள்ளி வந்த மாட்டு வண்டிகள் பறிமுதல்: 6 பேர் கைது

பாபநாசம் அருகே ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 6 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பாபநாசம் அருகே ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 6 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 
அய்யம்பேட்டை பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் போலீஸார் புதன்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது,  கணபதியக்ரஹாரம் அய்யம்பேட்டை சாலையில் 3 மாட்டு வண்டிகளில் சிலர்  குடமுருட்டி ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிந்தது. அந்த 3 மாட்டு வண்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். 
இதேபோல்,  சூலமங்கலம் பிரதான சாலையில் அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த மூன்று மாட்டு வண்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.மேலும் மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களான கோபாலபுரம் தர்மதுரை, மாகாளிபுரம் சூர்யா, ரெகுபதி, அய்யம்பேட்டை குணசேகரன்,திருநாவுக்கரசு, மதிவாணன் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →