தஞ்சாவூர்

முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

முன்னாள் படை வீரர்கள் சிறார்களுக்கு முப்படை வீரர் வாரியத்திலிருந்து கல்வி நிதியுதவிப் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வெளியிட்ட அறிக்கை:
மத்திய முப்படை வீரர் வாரியத்திலிருந்து கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் இளநிலைப் பட்டப்படிப்பு (கலை, அறிவியல்) பயிலும் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களுடைய விதவையர்களின் இரு சிறார்களுக்கு கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பங்களை w‌w‌w.‌k‌s​b.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04362 - 230104 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  
இரண்டாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் மே மாதம் முதலும், பத்தாம், பிளஸ் 2 வகுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜுலை மாதமும்,  இளநிலை பட்டப்படிப்புக்கு ஆகஸ்ட் மாதம்  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாகும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT