முன்னாள் படைவீரர்களுக்கு கோயில் இரவுக் காவலர் பணி
திருக்கோயில்களில் இரவு நேரக் காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
திருக்கோயில்களில் இரவு நேரக் காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இக்கோயில் பாதுகாவலர் பணியில் சேருவதற்கு விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் விருப்ப விண்ணப்பத்தை ஏப். 10-க்குள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் அளித்து பயனடையலாம். மேலும், பணியிடம் காலியாக உள்ள கோயில்களின் விவரங்களைத் தெரிந்து கொள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04362 - 230104 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.