முகப்பு
தஞ்சாவூர்

 தாராசுரத்தில் தீ விபத்து நிவாரண உதவி

கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேளாண்மை அமைச்சர் இரா. துரைக்கண்ணு நிவாரணத் தொகையை வழங்கினார்.

Updated On : 21 மே, 2018 at 7:28 AM
பகிர்:

கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேளாண்மை அமைச்சர் இரா. துரைக்கண்ணு நிவாரணத் தொகையை வழங்கினார்.
தாராசுரம் திருக்குளம் மேல்கரையைச் சேர்ந்த சின்னசாமி மகன் ஆஷா (43). இவரது கூரை வீடு எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து முழுவதும் எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு அரசு நிவாரணத் தொகையை வழங்கினார்.
 இதில் ஒன்றிய செயலாளர் அறிவழகன், வட்டாட்சியர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.