மே 22, 23-இல் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் கறவை மாடு வளர்ப்பு, முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த இரு நாள் பயிற்சி முகாம் மே 22, 23-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் நடைபெறவுள்ள இப்பயிற்சிக்கு வரும் அனைவரும் தவறாமல் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது வேறு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் விவரங்களுக்கு 9789302906, 04362 - 264665 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் மையத் தலைவர் ஏ. முகமது சபியுல்லா தெரிவித்துள்ளார்.