தஞ்சாவூர்

மாநில வாலிபால் போட்டி: முதலிடம் பெற்ற அரசுப் பள்ளிக்கு பாராட்டு

DIN

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில கையுந்துப் பந்து (வாலிபால்) போட்டியில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் முதல் இடம் பிடித்தனர். 
17 வயதுக்குள்பட்டோருக்கான மூத்தோர் (சீனியர்) பிரிவில் 11 அணிகள் பங்கேற்றன. இப்பிரிவில் மாணவி சம்யுக்தா தலைமையிலான பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி மாநில அளவில் முதலிடம் பெற்றது. 
வெற்றி பெற்ற அணிக்கு அணவயல் பாரத் பால் நிறுவனத்தின் தலைவர்  கணேசன் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணம், சீருடைகள்  வழங்கினார். 
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியர் சி.கஜானாதேவி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், சக மாணவிகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT