அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ஸ்மாஷ்-18 என்ற பெயரில் கணினி அறிவியல் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்தார். வணிகவியல்துறைத் தலைவர் எம்.நாசர் தொடக்கவுரை நிகழ்த்தினார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சி. சீதாராமன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள் என். ஜெயவீரன், ஏ. சேக் அப்துல் காதர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கல்லூரி எம்சிஏ மாணவர் ஏ.பி. முகமது ஆசாத் நன்றி கூறினார்.