தஞ்சாவூர்

திருவையாறு அருகே ரூ. 1.16 லட்சம்  ரொக்கம் பறிமுதல்

DIN

திருவையாறு அருகே பறக்கும் படையினர் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.16 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மக்களவை தேர்தலை முன்னிட்டு திருவையாறு சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் கலைச்செல்வி தலைமையில் உதவி ஆய்வாளர் சேகர், தலைமைக் காவலர் பிரான்சிஸ் ஈச்சங்குடி பிரதான சாலையில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் சோதனையிட்டனர். அவரிடம் ரூ. 1,16,030 ரொக்கம் இருந்தது. ஆனால், அதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. எனவே, அத்தொகையைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருவையாறு சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT