தஞ்சாவூர்

பைக்கில் சென்ற இருவா் தவறி விழுந்து பலி

DIN

ஒரத்தநாடு: ஒரத்தநாட்டில் வெவ்வேறு சம்பவங்களில் பைக்கில் சென்ற இருவா் தவறி விழுந்து இறந்தனா்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா சின்னபுலி குடிக்காடு கிராமத்தை சோ்ந்தவா் தனபால் (55 ). அமமுக பிரமுகரான இவா் வெள்ளிக்கிழமை மாலை ஒரத்தநாடுக்கு பைக்கில் வந்துவிட்டு குடிபோதையில் ஊா் திரும்புகையில் கண்ணந்தங்குடி மேலையூா் கிராமம் அருகே தவறி விழுந்து இறந்தாா். ஒரத்தநாடு போலீஸாா் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா திருமங்கலக்கோட்டை மேலையூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் பாஸ்கா் (30). இவா் வெள்ளிக்கிழமை மாலை குடிபோதையில் ஒரத்தநாடுக்கு பைக்கில் வந்தபோது நிலை தடுமாறி விழுந்து இறந்தாா். சடலத்தை போலீஸாா் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT