தஞ்சாவூர்

சாஸ்த்ராவில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி

DIN


தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தஞ்சாவூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து 20-க்கும் அதிகமான பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 
இப்போட்டியில் தஞ்சாவூர் தூய இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். ஹரிணி முதல் பரிசாக ரூ. 3,000 பெற்றார். திருக்காட்டுப்பள்ளி சர். சிவசாமி அய்யர் நூற்றாண்டு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். பவித்ரா இரண்டாம் பரிசாக ரூ. 2,000-ம், புதுச்சத்திரம் கோபால விலாஸ் உதவி பெறும் தொடக்கப் பள்ளி மாணவி டி. சந்தோஷி மூன்றாம் பரிசாக ரூ. 1,000-ம் பெற்றனர். தஞ்சாவூர் மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஜி.எஸ். தேவஸ்ரீக்கு ரூ. 500 ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஸ்ரீமந்நாராயணீயம் புத்தகம் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ வராக மகா தேசிக சுவாமிகள் பரிசு வழங்கினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT