தஞ்சாவூர்

"சில்லறை வர்த்தகக் கொள்கைகளை உருவாக்கினால் வணிக மாற்றம் ஏற்படும்'

DIN

தமிழகத்தில் மாநில அளவில் சில்லறை வர்த்தக கொள்கைகளை உருவாக்கினால் வணிக மாற்றத்தை உருவாக்க முடியும் என்றார் இந்திய சில்லறை விற்பனையாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் குமார் ராஜகோபாலன்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சில்லறை வணிகத்தின் போக்கை பெரிதும் மாற்றி உள்ளது. அதனால் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. போட்டி அதிகரித்திருக்கின்றன. வாடிக்கையாளர்களும் பயனடைகின்றனர். இதுபோன்ற விஷயங்களை வணிகர்களுக்கு எடுத்துச் சொல்ல தொழில் வர்த்தக சங்கம் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்திய அளவில் சில்லறை வர்த்தகக் கொள்கைகளை உருவாக்க முயற்சி செய்தோம். அதில் சரியான இலக்கு எட்டப்படவில்லை. இதையடுத்து மாநில அளவில் இந்தக் கொள்கைகளை உருவாக்க முயற்சி செய்தோம். அதன்படி, மகாராஷ்டிரம், ஆந்திரம், ஹரியாணா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன. இதில், தமிழகமும் விரைவில் இணைந்து பயனடைய வேண்டும். அப்படி செய்தால், ஒரு நல்ல வணிக மாற்றத்தை உருவாக்க முடியும்.
ஒரு சில்லறை நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டுமானால், 48 விதமான உரிமங்கள் பெற வேண்டும். இதை எளிமையாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 40 சதவீத பெண்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், சில்லறை வணிகத்தில் 12 சதவீதம் பேர்தான் ஈடுபடுகின்றனர். எனவே, சில்லறை வணிகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்தால் அதிக அளவில் ஈடுபடுவர். எனவே, பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். இதன் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
நம் நாட்டின் சில்லறை வணிகத்தின் வளர்ச்சி 15 சதவீதமாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் 40 சதவீதமாக இருக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தால்  சில்லறை வணிகத்தில் பாதிப்புகள் இல்லை. எனவே, சில்லறை வணிகத்தில் நவீன யுக்திகளை கையாள வேண்டும் என்றார் குமார் ராஜகோபாலன்.
பின்னர், தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் விற்பனையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குமார் ராஜகோபாலன், தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.பி.எஸ். அருள்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT