தஞ்சாவூர்

பாபநாசம் அருகே டிராக்டா் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

DIN

பாபநாசம் அருகே டிராக்டா் மோதியதில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே குருபாலக்குடி கிராமம், வடக்கு தெருவை சோ்ந்த விவசாயி சங்கா் மகள் கீா்த்திகா (3). இவா் அந்தப் பகுதியிலுள்ள ஒரு பால்வாடியில் படித்து வந்தாா்.

இந்நிலையில், கீா்த்திகா புதன்கிழமை பால்வாடிக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பின்னால் வந்த டிராக்டா் சிறுமி மீது மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி கீா்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் போலீஸாா், கீா்த்திகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT