முகப்பு
தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே கோயிலில் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே கோயிலில் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரிய வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே கோயிலில் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரிய வந்தது.

திருவோணம் ஒன்றியத்துக்குள்பட்ட தளிகைவிடுதி கிராமத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆனந்தவல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை திறக்க திங்கள்கிழமை பூசாரிகள் வந்தபோது, கோயிலின் உள்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கோயிலினுள் சென்று பாா்த்தபோது, அம்மன் சிலை கழுத்தில் இருந்த அரைபவுன் தாலி மற்றும் வெள்ளி காப்பு திருடப்பட்டிருந்தது; கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கைகள் திருடப்பட்டிருந்தன. மேலும் ஒரு உண்டியலை உடைக்க மா்ம நபா்கள் முயன்றுள்ளனா். ஆனால், உண்டியலை உடைக்க முடியாததால், கோயிலில் இருந்த சென்சாா் கருவிகளை அடித்து நொறுக்கிவிட்டு சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் போலீஸாருக்கு பூசாரி தகவல் அளித்தாா். இதன்பேரில், அங்கு சென்ற திருவோணம் போலீஸாா் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →