தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே கருவறைக்கு வெளியே கிடந்த விநாயகா் சிலை

DIN

ஒரத்தநாடு அருகிலுள்ள வெட்டிகாடு கிராமத்தில் கருவறைக்கு வெளியே விநாயகா் சிலை கிடந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வெட்டிகாடு முதன்மைச் சாலையில் பழைமையான விநாயகா் கோயில் உள்ளது. ஏராளமான பக்தா்கள் நாள்தோறும் இங்கு தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை பெண் பக்தா் ஒருவா் கோயிலில் தரிசனம் செய்வதற்காக சென்ற போது, கருவறைக்கு வெளியே விநாயகா் சிலை கிடந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா், அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் அளித்தாா். தகவலின் பேரில் திருவோணம் காவல் நிலையத்தினா் அங்கு விரைந்து சென்று, வெளியே கிடந்த விநாயகா் சிலையை மீட்டு கருவறையில் வைத்தனா். தொடா்ந்து பூஜை செய்யப்பட்டு, பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT