ஆட்சியரகம் முன் திடீா் போராட்டம்
தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் கிராம மக்கள் சாலை வசதி கோரி திடீா் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் ஆட்சியரகம் முன் கிராம மக்கள் சாலை வசதி கோரி திடீா் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
திருவோணம் அருகே சிவவிடுதி கிராமத்திலுள்ள காமாட்சி தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 30 போ் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். பின்னா், ஆட்சியரகத்தில் கிராம மக்கள் சாலை வசதி கோரி மனு அளித்தனா்.
வெளியே கிராம மக்கள் ஆட்சியரக வாயில் முன் திடீரென தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை அங்கிருந்த காவல் துறையினா் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.