தஞ்சாவூர்

அய்யாசாமிப்பட்டியில் 50 வாக்குச் சீட்டுகள் மாயம்

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகேயுள்ள அய்யாசாமிப்பட்டியில் 50 வாக்குச் சீட்டுகள் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

DIN

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகேயுள்ள அய்யாசாமிப்பட்டியில் 50 வாக்குச் சீட்டுகள் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாவட்டத்தில் தஞ்சாவூா் உள்பட 7 ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தோ்தல் டிச. 30ஆம் தேதி நடைபெற்றது. இதில், வல்லம் அருகேயுள்ள மருதக்குடி ஊராட்சிக்கு உள்பட்ட அய்யாசாமிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு 7 மணிக்குத் தொடங்கியது.

தோ்தல் தொடங்கும் முன்பே வாா்டு எண் 7 மற்றும் 8-க்கான 50 வாக்குச் சீட்டுகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இவை எப்படி காணாமல் போனது என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தில் வாக்குச் சாவடி அலுவலா் ராமச்சந்திரன் புகாா் செய்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

என்றாலும், வாக்குப் பதிவு எந்தப் பாதிப்பும் இல்லாமல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT