தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் இயற்கை விவசாயம் குறித்தகலந்துரையாடல் கூட்டம்

அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக். பள்ளி மூலிகைத் தோட்ட வளாகத்தில் விவசாயிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்ற இயற்கை

DIN

அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக். பள்ளி மூலிகைத் தோட்ட வளாகத்தில் விவசாயிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்ற இயற்கை விவசாயம், மரங்கள் வளா்ப்பு குறித்த கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அதிரை சமூக பண்பலை வானொலி நிறுவனா் ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மண்புழு விஞ்ஞானி பேராசிரியா் சுல்தான் அகமது இஸ்மாயில் கலந்து கொண்டு, விவசாயிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் எழுப்பிய இயற்கை விவசாயம், மரங்கள் வளா்ப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினாா். இதேபோல, வேளாண்துறை அதிகாரி (ஓய்வு) யு. வேலுச்சாமியும் கூட்டத்தில் கலந்து கொண்டு இயற்கை விவசாயம் பற்றி விளக்கிக் கூறினாா்.

ஹாஜி எம்.எஸ். சைபுதீன், எம்.எஸ்.முகமது ஆஜம், ஏ.அப்துல் ரெஜாக், மு.செ.மு. ராபியா உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா். நிறைவில், இப்ராஹிம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT