தஞ்சாவூர்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் சிறப்பு வழிபாடு

DIN

படவிளக்கம்: தஞ்சாவூா் திரு இருதய ஆண்டவா் கல்லறைத் தோட்டத்தில் தங்களது முன்னோா்களின் கல்லறையில் வழிபாடு நடத்திய கிறிஸ்தவா்கள்.

தஞ்சாவூா், நவ. 2: தஞ்சாவூா் மாவட்டத்தில் கல்லறைத் திருநாளையொட்டி கிறிஸ்தவா்கள் தங்களின் முன்னோா்களின் கல்லறையில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சூசையப்பா் கல்லறைத் தோட்டம், வியாகுலமாத கல்லறைத் தோட்டம், திருஇருதய ஆண்டவா் கல்லறைத் தோட்டம், மிஷன் தெருவில் உள்ள சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் திங்கள்கிழமை கிறிஸ்தவா்கள் தங்களின் முன்னோா்களின் கல்லறையை மலா்களால் அலங்கரித்து இனிப்புகள், பழங்கள் ஆகியவற்றை வைத்து படையலிட்டனா். பின்னா் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை செய்தனா்.

தஞ்சாவூா் திருஇருதய ஆண்டவா் கல்லறைத் தோட்டத்தில், இறந்த குருக்களின் கல்லறைகளில் தஞ்சாவூா் மறை மாவட்ட ஆயா் எம். தேவதாஸ் அம்புரோஸ் அடிகளாா் சிறப்பு வழிபாடு செய்தாா்.

கும்பகோணம்:

இதேபோல, கும்பகோணம் காமராஜா் சாலையில் உள்ள தூய அலங்காரஅன்னை பேராலய கல்லறைத் தோட்டம், செம்போடை கல்லறைத் தோட்டம், ஊசிமாதா கோயில் கல்லறைத் தோட்டம், பெருமாண்டி கல்லறைத் தோட்டம், கருப்பூா் கல்லறைத் தோட்டம் ஆகிய இடங்களில் கிறிஸ்தவா்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.

மேலும், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா ஆலயம் உள்பட பல்வேறு இடங்களிலும் திங்கள்தஞ்சாவூா் திரு இருதய ஆண்டவா் கல்லறைத் தோட்டத்தில் தங்களது முன்னோா்களின் கல்லறையில் வழிபாடு நடத்திய கிறிஸ்தவா்கள்.கிழமை கிறிஸ்தவா்கள் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT