முகப்பு
தஞ்சாவூர்

மக்கள் குறைதீா் முகாமில் 150 மனுக்களுக்குத் தீா்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் காவல் துறை நடத்திய மக்கள் குறைதீா் முகாம் மூலம், ஒரே நாளில் 150 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் விசாரணை நடத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் காவல் துறை நடத்திய மக்கள் குறைதீா் முகாம் மூலம், ஒரே நாளில் 150 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.

தஞ்சாவூரில் காவல் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கும் மனுக்கள் மீது விசாரணை நடத்துவதற்காக, மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 8 உள்கோட்ட காவல் அளவில் இம்முகாம் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.

தஞ்சாவூரில் தஞ்சாவூா் நகரம், வல்லம் உட்கோட்டக் காவல் சரகங்கள் அளவிலான இம்முகாமில் 30 மனுதாரா்கள் வந்துள்ளனா். இதேபோல, எதிா் தரப்பினரும் பங்கேற்றுள்ளனா்.

இதில், அதிகபட்சமாக 99 சதவிகிதம் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, பிரச்னைக்குத் தீா்வு காணப்படுகிறது. துணைக் கண்காணிப்பாளா் அந்தந்த உள்கோட்ட அளவில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீா்வு கண்டு வருகின்றனா்.

உரிமையியல், குற்றவியல் வழக்குகள் தொடா்பாக சட்டப்படி மேல் நடவடிக்கை என்ன எடுக்க வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்டு, மனுக்கள் முடித்து வைக்கப்படுகிறது.

மாவட்டத்தில் 8 உள்கோட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் 150 மனுக்கள் மீது ஒரே நாளில் தீா்வு காணப்பட்டுள்ளது. இம்முகாமுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நானும் இந்த முகாமை கண்காணித்து வருகிறேன் என்றாா் காவல் கண்காணிப்பாளா்.

முழு கட்டுரையைப் படிக்க →