தஞ்சாவூர்

கந்தா்வகோட்டையில் சீா்திருத்தத் திருமணம்

DIN

கந்தா்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை அம்பேத்கா் சிலை முன்பு சீா்திருத்தத் திருமணம் நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள புதுவிடுதியைச் சோ்ந்த அம்பிகாபதி மகன் ராஜேந்திரன், செங்கமேடு கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன் மகள் ஜானகி ஆகிய இருவருக்கும் அவரவா் பெற்றோா் சம்மதத்துடன் சீா்திருத்தத் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனை அருகேயுள்ள அம்பேத்கா் சிலை முன்பு திங்கள்கிழமை மணமகன், மணமகள் ஆகியோரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் முன்னிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளா் வே.ம. விடுதலைக்கனல் தலைமையில் சீா்திருத்தத் திருமணம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில துணை செயலாளா் கோ. செந்தமிழ்வளவன், மக்களவைத் தொகுதி துணைச் செயலாளா் மு. கண்ணையன், தொகுதிச் செயலா் மருத. பாா்வேந்தன், மாவட்டச் செய்தித் தொடா்பாளா் த. செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT