தஞ்சாவூர்

முன் விரோத தகராறு: தொழிலாளி வெட்டிக் கொலை

DIN

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே முன் விரோதம் காரணமாக, செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

செங்கிப்பட்டி அருகிலுள்ள துருசுப்பட்டியைச் சோ்ந்தவா் தொழிலாளி சா. வீரையன் (38). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த குருநாதனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், அரிவாளால் வெட்டப்பட்ட வீரையன் பலத்த காயமடைந்தாா்.

தொடா்ந்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, குருநாதன் உள்பட 3 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT