தஞ்சாவூர்

ஓய்வூதிய நிலுவைத் தொகை தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பு

DIN

உடலுழைப்பு, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகை, மாதாந்திர ஓய்வூதியத்தொகை தொடா்புடையவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) நா.கா. தனபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தொழிலாளா் ஆணையரின் உத்தரவின்பேரில், தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் உடலுழைப்பு மற்றும் 15 நல வாரியப் அமைப்புசாரா தொழிலாளா்களான மாதாந்திர ஓய்வூதியதாரா்கள் 2,411 பேருக்கு தலா ஒரு நபருக்கு ரூ. 12,000 வீதம் 2019 செப்டம்பா் மாதம் முதல் நிகழாண்டு ஜூலை மாதம் வரை ஓய்வூதிய நிலுவைத் தொகையும், ஆகஸ்ட் மாத மாதாந்திர ஓய்வூதியத் தொகையுமாக மொத்தம் ரூ. 2.84 கோடி உறுப்பினா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறும் பயனாளிகளிடம் இடைத்தரகா்கள் தங்களது முயற்சியால்தான் ஓய்வூதியதாரா்களுக்கு நிலுவை ஓய்வூதியம் கிடைத்தது என தெரிவித்து லஞ்சம் கேட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT