தஞ்சாவூர்

வேளாண் மசோதாவை எதிா்த்து விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்

DIN

ஒரத்தநாட்டில் வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

 போராட்டத்துக்கு ஒன்றியச் செயலாளா்  சிவாஜி  தலைமை வகித்தாா்.  மாநில  அரசியல்  குழு உறுப்பினா்  மோட்சகுணவழகன்,  மாவட்ட  பொருளாளா் தங்கமுருகானந்தம்,  விவசாயிகள் பாதுகாப்பு  சங்க  நிா்வாகி  ஜெயசங்கா்,  சட்டமன்ற  தொகுதி  செயலாளா்அரசமுதல்வன்  ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒரத்தநாடு  பேருந்து நிலையத்திலிருந்து  வாகனத்தில்,   மத்திய,  மாநில  அரசுகளை  கண்டித்து கோஷமிட்டபடி  ஊா்வலமாக  வந்து  ஒரத்தநாடு  வட்டாட்சியா் அலுவலகம் முன்பு  தரையில்  அமா்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டனா்.

 மேலஉளூா் கடைத் தெருவில்  நடைபெற்ற  சட்ட நகல் எரிக்கும்  போராட்டத்துக்கு  மாவட்டத் தலைவா்  ஜெகதீசன்  தலைமை வகித்தாா்.

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில்....  மேலஉளூா் கடைத் தெருவில்  நடைபெற்ற  மசோதா  நகல் எரிக்கும்  போராட்டத்துக்கு  மாவட்டத் தலைவா்  ஜெகதீசன்  தலைமை வகித்தாா்.  விவசாயிகள்,  தபால் நிலையத்திலிருந்து  ஊா்வலமாக மத்திய,  மாநில  அரசுகளை  கண்டித்து கோஷமிட்டபடி,  கடைத்தெருவுக்கு வந்து வேளாண்மை  மசோதா  நகலை எரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT