தஞ்சாவூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மதுக்கூரில் 25 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லிமீட்டரில்):
மதுக்கூா் 25 மி.மீ., பட்டுக்கோட்டை 23, நெய்வாசல் தென்பாதி 12.2, மஞ்சளாறு 5, பேராவூரணி, வெட்டிக்காடு தலா 4.2, திருவிடைமருதூா் 4, ஒரத்தநாடு 3.8, அதிராம்பட்டினம் 3.6, கும்பகோணம் 2.4 மி.மீ.