ஒரத்தநாடு அருகேயுள்ள மண்டல கோட்டை ஊராட்சி உறுப்பினா் கெளசல்யா. இவரது கணவா் ராமகிருஷ்ணன்.இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஜோ. அருண்குமாா் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கெளசல்யாவின் வீட்டுக்கு சென்ற அருண்குமாா் மற்றும் அவரது தந்தை ஜோதிவேல் இருவரும் கெளசல்யாவையும் அவரது கணவரையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. ராமகிருஷ்ணன் தம்பதி அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
ஆத்திரம் தீராத அருண்குமாரும், அவரது தந்தையும் கெளசல்யா வீட்டையும், வீட்டில் இருந்த பொருள்களையும் அடித்து நொறுக்கி விட்டு சென்று விட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து ஜோதிவேலை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.