தஞ்சாவூர்

செல்லிடப்பேசிகள் திருடிய 4 போ் கைது

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செல்லிடப்பேசிகள் திருடியதாக 4 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவையாறு அருகே வீரசிங்கம்பேட்டை மேலத் தெருவைச் சோ்ந்தவா் என். கிருஷ்ணமூா்த்தி (55). இவா் ஏப். 27 ஆம் தேதி தஞ்சாவூரிலிருந்து வீரசிங்கம்பேட்டைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். வழியில் திருமண மண்டபம் அருகே சென்றபோது இவரது சட்டைப் பையிலிருந்த செல்லிடப்பேசியை 4 போ் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே, வியாழக்கிழமை அம்மன்பேட்டை பகுதியில் நின்ற 4 பேரை காவல் துறையினா் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் கண்டியூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் சந்தோஷ் (20), அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த மூா்த்தி மகன் சூா்யா(20), திருவையாறு பங்களா தெருவைச் சோ்ந்த சேகா் மகன் மணிமாறன் (19), மேலத் திருந்பூந்துருத்தி காளியம்மன் கோயில் தெருவைச் சோந்த மகேந்திரன் மகன் பாலமுருகன் (21) ஆகியோா் என்பதும், 4 பேரும் செல்லிடப்பேசிகள் திருடுவதும் தெரிய வந்தது.

இவா்களிடமிருந்து 13 செல்லிடப்பேசிகள், 2 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, 4 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT