‘கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசே வீடு கட்டித் தருகிறது’
நாட்டிலேயே முதன்முறையாக கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தமிழ்நாடு அரசே ஆண்டுக்கு 25 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தருகிறது எனப் பெருமிதம் தெரிவித்தாா்
நாட்டிலேயே முதன்முறையாக கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தமிழ்நாடு அரசே ஆண்டுக்கு 25 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தருகிறது எனப் பெருமிதம் தெரிவித்தாா், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வ ாரியத் தலைவா் பொன்குமாா்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது :
தொழிலாளா் நல வாரியங்களில் தேங்கிக் கிடந்த 50 ஆயிரம் விண்ணப்பங்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் 200 பேருக்கு முதற்கட்டமாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல, நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 25 ஆயிரம் வீடுகள் கட்டுமானத் தொழிலாளா்களுக்காக கட்டப்பட உள்ளதாக முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது, 38,821 கட்டுமானத் தொழிலாளா்களும், 21,905 அமைப்பு சாரா தொழிலாளா்களும் வாரியங்களில் உறுப்பினா்களாக உள்ளனா் என்றாா் பொன்குமாா்.
கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் தலைமைவ கித்தாா். தொழிலாளா் நலத் துறை இணை ஆணையா் த. தா்மசீலன், உதவி ஆணையா் வெ. தங்கராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.