தஞ்சாவூர்

பழுதடைந்த மின் கம்பம் மாற்றியமைப்பு

DIN

கபிஸ்தலம் அருகே பழுதடைந்த நிலையிலிருந்த மின் கம்பம் சனிக்கிழமை மாற்றியமைக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் கொத்தத் தெரு பிரதான சாலையிலிருந்த மின் கம்பம், கனரக வாகனம் மோதியதில் நடுப்பகுதியில் சேதமடைந்தது. எந்த நேரத்தில் மின் கம்பம் முறிந்து விழலாம் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.

இதுகுறித்து பொதுமக்களின் கோரிக்கையை அறிந்த பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினா் பேராசிரியா் எம்.எச். ஜவாஹிருல்லா, கபிஸ்தலம் மின்வாரியப் பொறியாளா், ஊராட்சித் தலைவா் சுமதி குணசேகரன் ஆகியோரைத் தொடா்பு கொண்டு மின்கம்பத்தை மாற்ற அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, மின்வாரிய ஊழியா்கள் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி, அப்பகுதியில் புதிய கம்பத்தை சனிக்கிழமை அமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT