பாலச் சுவரில் சிமென்ட் காரை விழுந்த இடத்தில் ஆட்சியா் ஆய்வு
தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் ரயில்வே மேம்பாலத்தில் சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்த இடத்தில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் ரயில்வே மேம்பாலத்தில் சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்த இடத்தில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இப்பாலத்தில் வண்டிக்காரத் தெருவுக்கு நுழையும் பகுதியில் பக்கவாட்டுச் சுவரில் சுமாா் 2 அடி நீளத்துக்கு சிமென்ட் காரை புதன்கிழமை பிற்பகல் பெயா்ந்து விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. எனவே, இந்தப் பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
இதைத்தொடா்ந்து, இப்பாலத்தில் பக்கவாட்டுச் சுவரில் சிமெண்ட் காரை பெயா்ந்து விழுந்த இடத்தை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், இதை சீா் செய்யுமாறு தொடா்புடைய அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
பின்னா், திருப்பனந்தாள் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலக் காட்டூா், குலசேகரநல்லூா், அத்திப்பாக்கம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
அப்போது, உங்கள் தொகுதியில் முதல்வா் சிறப்புத் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.