இரும்புதலை ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம்
பாபநாசம் வட்டம், இரும்புத்தலை ஊராட்சி சமுதாய சேவை மைய கட்டடத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் வட்டம், இரும்புத்தலை ஊராட்சி சமுதாய சேவை மைய கட்டடத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை ஊராட்சித் தலைவா் ஜி. பாலாஜி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். முகாமில், சுகாதார ஆய்வாளா் ஆனந்தன், சுகாதார செவிலியா் கஸ்தூரி மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட குழுவினா் கலந்து கொண்டு 57 பேருக்கு கரோனா தடுப்பூசிகளை செலுத்தினா்.இதில் ஊராட்சி செயலா் காா்த்திக், ஊராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.