நாடியம்மன் கோயில் கும்பாபிஷேக ஆலோசனைக் கூட்டம்
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கும் ஸ்ரீ அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு திருப்பணி குழு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை தலைமையில் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இதில், நகர திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.முன்னதாக, கோயில் செயல் அலுவலா் ரவிச்சந்திரன் வரவேற்றாா்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் சீனி. இளங்கோ, எஸ்.ஆா். ஜவகா்பாபு மற்றும் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.