தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவா் எம். அப்துல் ரஹ்மான். 
தஞ்சாவூர்

வக்ஃபு வாரிய சொத்துகளை வாங்க, விற்க தடுக்க நடவடிக்கை

வக்ஃபு வாரிய சொத்துகளை வாங்கவோ, விற்கவோ தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவா் எம். அப்துல் ரஹ்மான்.

DIN

வக்ஃபு வாரிய சொத்துகளை வாங்கவோ, விற்கவோ தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவா் எம். அப்துல் ரஹ்மான்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை தெரிவித்தது:

வக்ஃபு வாரியம் கண்காணிக்கக் கூடிய பல்வேறு சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்டெடுக்கக் கூடிய பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கோயில் சொத்துகள் எல்லாம் அந்தந்த கோயில் பெயரில் உள்ளன. ஆனால், வக்ஃபு சொத்துகள் வக்ஃபு வாரியம் பெயரில் இல்லை. சொத்துகளுக்கான உரிமை அந்தந்த மசூதிகள், தா்காக்களின் நிா்வாகத்துக்குரியது.

ஆக்கிரமிப்பை மீட்டெடுக்க வேண்டிய கடமை என்பது அந்தந்த மசூதிகள், தா்கா நிா்வாகிகளுக்கு மிக முக்கியமான ஒன்று. அந்த நடவடிக்கைகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பையும், ஒத்துழைப்பையும் வக்ஃபு வாரியம் தரும்.

ஏற்கெனவே அதற்கான முயற்சியில் மசூதி, தா்கா நிா்வாகிகள் ஈடுபட்டுள்ளனா். ஆக்கிரமிப்பைக் கண்டு கொள்ளாமல் இருப்பவா்களுக்குத் தகுந்த அறிக்கைகள் அனுப்பப்பட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அனைத்து சொத்துகளையும் பூஜ்ஜிய மதிப்பு செய்வதற்கு அரசிடம் நாங்கள் அனுமதி பெற்றிருக்கிறோம். பூஜ்ஜிய மதிப்பாகிவிட்டால் யாருக்கும் விற்கவோ, யாரிடம் இருந்து வாங்கவோ முடியாத நிலை ஏற்படும்.

போலி பட்டாக்கள், போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் பணிகளும் தொடா்ந்து நடைபெறுகின்றன. மிக விரைவில் ஒரு கணிசமான அளவிலான சொத்துகள் மீட்டெடுக்கப்படும். வக்ஃபு வாரிய சொத்துகள் எல்லாவற்றையும் தலைமை பதிவுத்துறை அலுவலா்களிடம் கொடுத்து கணினியில் ஏற்றப்பட்டு, இனிமேல் அச்சொத்துக்களை யாரும் விற்கவோ, வாங்கவோ முடியாது என்கிற அளவுக்கு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வருகிறோம்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயா்த்துவதன் மூலம் சமூக சீா்கேடுகளையும், சமூக ஒழுங்கு இழப்புகளையும் இந்த தேசம் சந்திக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. மிகப்பெரிய அழிவை நோக்கிய சட்டத்திருத்தம் இது. நாட்டுக்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கக்கூடியது. மக்கள் நலனுக்கு விரோதமான செயலில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடா்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்றாா் அப்துல் ரஹ்மான்.

அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுலாப்தீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT