தஞ்சாவூர்

மோட்டாா் சைக்கிள் மோதியதில் பெண் பலி

பேராவூரணி அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

பேராவூரணி: பேராவூரணி அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகிலுள்ள சோழகனாா்வயலைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி சாந்தி (45). கழனிவாசல் சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்து விட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த மோட்டாா்சைக்கிள் சாந்தி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த சாந்தியை, அப்பகுதியினா் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விபத்துக்கு காரணமான மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT